Showing posts with label Update News Alert. Show all posts
Showing posts with label Update News Alert. Show all posts

Friday, May 15, 2020

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 925 ஆக உயர்வு



Srilanka Colombo (News 1st) நாட்டில் Covid-19 தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 471 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Covid-19 தொற்றுக்குள்ளானவர்களில் 445 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேவையான சுகாதார வழிமுறைகளை திட்டமிட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இந்த மூவரடங்கிய குழுவை நியமித்துள்ளார்.

பொதுத் தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பில் இந்த குழு ஆராயவுள்ளது.

குழுவினூடாக கிடைக்கும் பரிந்துரைகளுக்கு அமைய, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Wednesday, May 13, 2020

நாட்டில் 889 பேருக்கு கொரோனா தொற்று



Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 889 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றிரவு மேலும் ஐவர் தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டது.

இதன்பிரகாரம்,நேற்றைய தினத்தில் மாத்திரம் 20 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானோரில் 17 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தொற்றுக்குள்ளான மேலும் இருவர் கடற்படை உறுப்பினர்களின் உறவினர்கள் என்பதுடன், மற்றுமொருவர் துபாயிலிருந்து நாடு திரும்பியவர் எனவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

தொற்றுக்குள்ளானோரில் 514 நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 16 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 382 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Tuesday, May 12, 2020

வுஹான் வாழ் அனைவருக்கும் Covid -19 பரிசோதனை




Colombo (News 1st) சீனாவின் வுஹான் நகரிலுள்ள அனைவரையும் 10 நாட்களுக்குள் Covid -19 பரிசோதனைக்கு உட்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

வுஹான் நகரில் 11 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

குறித்த பரிசோதனைகள் தொடர்பில் அரசாங்கம் திட்டமொன்றை வகுக்கவுள்ளதாக சீன அரச ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

இந்நிலையில், சமூக ஒன்றுகூடல் தொடர்பில் விதிக்கப்பட்ட சட்டதிட்டங்களில் தளர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளமையால் வைரஸ் தாக்கம் மீண்டும் பரவும் அபாயம் அதிகமுள்ளதாக சீன அரசினால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 869 ஆக உயர்வு



 
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றிரவு 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.