Saturday, May 30, 2020

பதினேழாம் நாள் போர் முடித்த அன்று இரவு என்ன நடந்தது தெரியுமா


சருமத்தை பராமரிப்பதில் அற்புதமாக செயல்படும் கற்றாழை ஜெல்



கற்றாழையை பயன்படுத்தக்கூடிய இந்த வழிகளை அறிந்து கொண்டு, அதை உங்கள் சரும பராமரிப்பிற்கு ஏற்ற முறையில் சேர்த்துக்கொண்டு, மாசு மருவில்லா பொலிவான சருமத்தை பெறலாம்.

உலர் மற்றும் மங்கலான சருமத்தை மென்மையான சருமமாக மாற்ற, கற்றாழை, தேன் மற்றும் வெள்ளரி கொண்ட பேஸ் மாஸ்கை தயார் செய்யவும். இந்த மூன்று பொருட்களுமே நீர்த்தன்மை அளிக்க கூடியவை. இவற்றை பயன்படுத்தும் போது, சருமம் மென்மையாகி பொலிவு பெறுகிறது. 
 
ஒரு வெள்ளரி, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் கொஞ்சம் கற்றாழையை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை பூசிக்கொண்டு 20 நிமிடம் விட்டு பின்னர்  கழுவிக்கொள்ளவும்.
 
எண்ணெய் பசை மிக்க சருமம் எனில், உங்கள் சருமத்தில் இருந்து கூடுதல் எண்ணெயை, பருக்களை அகற்ற உதவும் கற்றாழை மாஸ்க் இது. ஒரு கோப்பையில்  கற்றாழை சாற்றை எடுத்துக்கொள்ளவும். அதில் 10 முதல் 12 சொட்டு டீ டிரி ஆயில் விடவும். இதை நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை இரவு படுக்கச் செல்லும் முன், முகத்தில் பூசிக்கொண்டு, காலையில் கழுவிக்கொள்ளவும். வாரம் ஒரு முறை இவ்வாறு பயன்படுத்தவும்.
 
இரண்டு கற்றாழை இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு போதுமானது. தேவை எனில் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம். இதில் கொஞ்சம் பாதாம் எண்ணெய் சேர்த்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் இரவு படுக்கச்செல்லும் முன் தடவிக்கொள்ளவும். இரவு அப்படியே விட்டு விட்டு காலை எழுந்ததும்  கழுவிக்கொள்ளவும்.

Monday, May 18, 2020

Mullivaikkal - Vidaikodu Engal Nade SONG


எத்தனை முறை முகம் கழுவலாம்




சிலர் அடிக்கடி முகத்தை கழுவி கொண்டே இருப்பர். இப்படி அடிக்கடி முகம் கழுவுவதால், சருமம் தன்னுடைய இயற்கை எண்ணெய் தன்மையை இழக்கிறது. 
வறண்ட சருமம் உள்ளவர்கள் நாளொன்றுக்கு இரண்டு முறையும், எண்ணெய் பசையுடன் கூடிய சருமம் உள்ளவர்கள் நான்கைந்து முறையும், நார்மல் சருமம் உள்ளவர்கள் மூன்று முறையும் முகம் கழுவலாம்.

இதை முயன்று பாருங்கள் சூப்பரான நண்டு கறி செய்வது எப்படி



என்னென்ன தேவை

சுத்தம் செய்யப்பட்ட கடல் நண்டு ½ கிலோ
பெரிய வெங்காயம் 2
தக்காளி 2
பச்சை மிளகாய் 2
இஞ்சிப்பூண்டு விழுது 1 டீஸ்பூன்
உப்பு
கடலை எண்ணெய் 1 குழிக்கரண்டி
மஞ்சள்தூள் ½ ஸ்பூன்
மல்லித்தூள் 2 ஸ்பூன்
மிளகாய்தூள் 1 ஸ்பூன்
மிளகுத்தூள் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை

எப்படிச் செய்வது:

வட சட்டியை அடுப்பில் வைத்து அது சூடானதும் எண்ணெயை ஊற்றி முதலில் இஞ்சிப்பூண்டு விழுதை போட்டு அத்துடன் பச்சை மிளகாய்களை ஒடித்துப் போடவும்,பச்சை வாசனை போனதும் வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்த்து கொஞ்சம் உப்புச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறம் அடைந்ததும், தக்காளி சேர்த்து வதக்கவும்.இரண்டும் நன்றாக குழைவாக வெந்ததும் பொடிகளைப் போட்டு கிளறுங்கள்.

இப்போது உங்கள் ருசிக்கேற்றபடி உப்புச் சேர்த்து மறுபடியும் கிளறிவிட்டு சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டுத் துண்டுகளை அள்ளிப்போட்டு கிளறி விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மூடிவைத்து வேக விடுங்கள்.

நண்டில் இருந்து வெளிப்படும் நீங்கள் ஊற்றிய நீரும் வற்றியதும் ஒரு முறை கிளறிவிட்டு அரைமணி நேரம் மூடி வைத்திருந்து பிறகு சாப்பிடுங்கள்.