Monday, May 18, 2020

சூப்களின் மருத்துவ பலன்கள்




நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவுவகைகளும், சீரான உடற்பயிற்சியும் அவசியம்.

ஆனால் இன்றைய அவசர காலகட்டத்தில் சத்தான உணவுகளை உட்கொள்கிறோமா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான்.

துரித உணவுகளின் பக்கம் மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளதால், காய்கறிகள் என்றாலே சிலர் வெறுப்படைகின்றனர்.

அத்தகையர்கள் மிக எளிதாக சூப் வைத்து குடிக்கலாம், உணவிற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு சூப் குடித்தால் நல்ல பசியை தூண்டிவிடும்.

அதுமட்டுமின்றி காலை, மாலை வேளைகளில் குடித்து வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

* 50 முதல் 75 கிராம் முடக்கத்தான் இலை (அ) முடக்கத்தான் பொடி மூன்று டீஸ்பூன் எடுத்து நன்றாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும்.

இதில் வெங்காயம், தக்காளி, காரட், பீன்ஸ், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, பூண்டு, இஞ்சி சேர்த்து, மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து கொதிக்கவிட்டு மசிக்கவும்.

இதனை தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் சர்க்கரை நோய், வயிற்றுப்புண், மூட்டுவலி மற்றும் பக்கவாதம் குணமடையும்.

* பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வல்லாரை கீரையுடன் தேவையான காய்கறிகள் சேர்த்து சூப் செய்து குடிக்கலாம், இதேபோன்று பொன்னாங்கன்னி கீரையையும், முருங்கை கீரையையும் செய்து சாப்பிடலாம்.

இதன் மூலம் நினைவாற்றல் அதிகரிப்பதுடன் கண் சம்பந்தமான நோய்கள் சரியாகும், எலும்புகள் வலுப்பெறும்.

* இதேபோன்று துளசி அல்லது துளசி பொடியை நீர் சேர்த்து, தேவையான அளவு காய்கறிகள் சேர்த்து சூப் செய்து குடிக்கலாம்.

இவ்வாறு குடித்தால் ஆஸ்துமா நோய் சரியாகும், சளி- இருமல் இருக்காது.

வீட்டில் அதிகமாக இருக்கும் பல்லிகளை விரட்ட சில எளிய வழிமுறைகள்




கோடை காலத்தில் ஒருவரின் வீட்டில் பல்லி அதிகமாக இருப்பது மிகவும் பொதுவானது. அத்தகைய சூழ்நிலையில், பல்லிகளை எப்படி நம் வீட்டில் எளிய முறையில் விரட்டுவது…

பல்லிகளைப் பார்துத பயப்படுபவர்கள் பலர் இன்று உள்ளனர். ஆமாம், பல்லியைப் பார்த்தவுடன் மூச்சடக்கி நிற்பவர்கள் இன்றும் பலர் உள்ளனர். எனவே அவர்களுக்கு உதவும் வகையில் பல்லியை வீட்டிலிருந்து எளிய முறையில் வீட்டை வீட்டு விரட்டுவதற்கான சில வழிகளை நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

1. முட்டை ஓடு – உங்கள் வீட்டிலிருந்து பல்லியை விரட்ட விரும்பினால், முட்டை உடைக்கும் போதெல்லாம், அதை குப்பையில் எறிவதற்கு பதிலாக, பல்லிகள் அதிகம் இருக்கும் இடங்களில் வைக்கவும்.

2. பூண்டு – பல்லியை வீட்டை விட்டு வெளியேற்ற, ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் பூண்டின் ஒரு சில மொட்டுகளை தொங்க விடுங்கள்.

3. குளிர்ந்த நீர் – பல்லியை வீட்டிலிருந்து விரட்டியடிக்க, பல்லிகள் அதிகம் இருக்கும் பகுதியில் குளிர்ந்த நீரைத் தெளிக்கவும், இதன் பிறகு அந்த இடத்தில் மீண்டும் பல்லிகள் வராது.

4. நாப்தாலீன் பந்துகள்(பூச்சி உருண்டை) – பல்லியை வீட்டை விட்டு வெளியே விரட்ட, நாப்தலின் பந்துகளை பயன்படுத்துங்கள்.

5. காபி பவுடர் – பல்லியை வீட்டிலிருந்து அகற்ற, காபி பவுடர் மற்றும் சமையல் பட்டை ஆகியவற்றைக் கலந்து தடிமனான கரைசலை உருவாக்கவும். இப்போது இந்த கலவையை சிறு உருண்டைகளா உருவாக்கி பல்லி அதிகம் காணும் இடத்தில் வைக்க வேண்டும். பின்னர் இந்த இடத்திற்கு பல்லிகள் வராது.

தினமும் கொண்டை கடலை சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா


கொண்டைக்கடலையில் பலவித ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. முடி, நகம் மற்றும்  உடல் வளர்ச்சிக்கு புரோட்டீன் சத்து மிக முக்கியம். எனவே தினமும் 100 கிராம் கொண்டைக் கடலையினை உட்கொண்டு வரவது நல்லது.

கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 100 கிராம் கொண்டைக் கடலையில் கிட்டத்தட்ட 19 கிராம் நார்சத்து நிறைந்துள்ளது. உடல்  எடையினை குறைக்க நார்சத்து முக்கியம். தினமும் நார்சத்து உணவினை உண்டு வருபவர்களுக்கு மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.

கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 

முடியின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு புரதம் மிக மிக முக்கியம்.கொண்டைக்கடலையை புரதம், இரும்பு, ஜின்க் மற்றும் பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உங்களின் முடி ஆரோக்கியமாக வளர உதவும். மேலும் முடி கொட்டுதலை தடுக்கும். உங்களின் முடி வேரிலிருந்து வலுவாக வளர மிகவும் பயனுள்ளதாக  அமைகின்றது.
 
கொண்டைக் கடலையில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது. உங்கள் உணவுகளில் உள்ள கால்சியம் சத்தினை உரிய மெக்னீசியம்  சாது மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. மேலும் உங்கள் எலும்பு மற்றும் பற்களின் வலிமையினை அதிகரிக்கின்றது. எனவே உடல் உழைப்பு அதிகம்  உள்ளவர்கள் தினமும் கொண்டைக் கடலையினை உட்கொண்டு வந்தால் நிறைய பயன் பெறலாம்.

கொண்டைக் கடலையில் நார்ச்சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இவற்றை நீங்கள் தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் ஜீரண உறுப்புகள் மற்றும்  குடலின் ஆரோக்கியம் மேம்படும். 

கொண்டைக்கடலையில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. உங்கள் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க பொட்டாசியம் சாது மிக மிக முக்கியம். உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் தினமும் கொண்டைக்கடலையை ஒரு கைப்பிடி உண்டு வந்தால் அவர்களின் இரத்த அழுத்தம் குறைந்து மேம்படும்.

Friday, May 15, 2020

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 925 ஆக உயர்வு



Srilanka Colombo (News 1st) நாட்டில் Covid-19 தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 471 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Covid-19 தொற்றுக்குள்ளானவர்களில் 445 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேவையான சுகாதார வழிமுறைகளை திட்டமிட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இந்த மூவரடங்கிய குழுவை நியமித்துள்ளார்.

பொதுத் தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பில் இந்த குழு ஆராயவுள்ளது.

குழுவினூடாக கிடைக்கும் பரிந்துரைகளுக்கு அமைய, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.