Saturday, May 30, 2020

பதினேழாம் நாள் போர் முடித்த அன்று இரவு என்ன நடந்தது தெரியுமா


சருமத்தை பராமரிப்பதில் அற்புதமாக செயல்படும் கற்றாழை ஜெல்



கற்றாழையை பயன்படுத்தக்கூடிய இந்த வழிகளை அறிந்து கொண்டு, அதை உங்கள் சரும பராமரிப்பிற்கு ஏற்ற முறையில் சேர்த்துக்கொண்டு, மாசு மருவில்லா பொலிவான சருமத்தை பெறலாம்.

உலர் மற்றும் மங்கலான சருமத்தை மென்மையான சருமமாக மாற்ற, கற்றாழை, தேன் மற்றும் வெள்ளரி கொண்ட பேஸ் மாஸ்கை தயார் செய்யவும். இந்த மூன்று பொருட்களுமே நீர்த்தன்மை அளிக்க கூடியவை. இவற்றை பயன்படுத்தும் போது, சருமம் மென்மையாகி பொலிவு பெறுகிறது. 
 
ஒரு வெள்ளரி, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் கொஞ்சம் கற்றாழையை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை பூசிக்கொண்டு 20 நிமிடம் விட்டு பின்னர்  கழுவிக்கொள்ளவும்.
 
எண்ணெய் பசை மிக்க சருமம் எனில், உங்கள் சருமத்தில் இருந்து கூடுதல் எண்ணெயை, பருக்களை அகற்ற உதவும் கற்றாழை மாஸ்க் இது. ஒரு கோப்பையில்  கற்றாழை சாற்றை எடுத்துக்கொள்ளவும். அதில் 10 முதல் 12 சொட்டு டீ டிரி ஆயில் விடவும். இதை நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை இரவு படுக்கச் செல்லும் முன், முகத்தில் பூசிக்கொண்டு, காலையில் கழுவிக்கொள்ளவும். வாரம் ஒரு முறை இவ்வாறு பயன்படுத்தவும்.
 
இரண்டு கற்றாழை இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு போதுமானது. தேவை எனில் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம். இதில் கொஞ்சம் பாதாம் எண்ணெய் சேர்த்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் இரவு படுக்கச்செல்லும் முன் தடவிக்கொள்ளவும். இரவு அப்படியே விட்டு விட்டு காலை எழுந்ததும்  கழுவிக்கொள்ளவும்.

Monday, May 18, 2020

Mullivaikkal - Vidaikodu Engal Nade SONG


எத்தனை முறை முகம் கழுவலாம்




சிலர் அடிக்கடி முகத்தை கழுவி கொண்டே இருப்பர். இப்படி அடிக்கடி முகம் கழுவுவதால், சருமம் தன்னுடைய இயற்கை எண்ணெய் தன்மையை இழக்கிறது. 
வறண்ட சருமம் உள்ளவர்கள் நாளொன்றுக்கு இரண்டு முறையும், எண்ணெய் பசையுடன் கூடிய சருமம் உள்ளவர்கள் நான்கைந்து முறையும், நார்மல் சருமம் உள்ளவர்கள் மூன்று முறையும் முகம் கழுவலாம்.

இதை முயன்று பாருங்கள் சூப்பரான நண்டு கறி செய்வது எப்படி



என்னென்ன தேவை

சுத்தம் செய்யப்பட்ட கடல் நண்டு ½ கிலோ
பெரிய வெங்காயம் 2
தக்காளி 2
பச்சை மிளகாய் 2
இஞ்சிப்பூண்டு விழுது 1 டீஸ்பூன்
உப்பு
கடலை எண்ணெய் 1 குழிக்கரண்டி
மஞ்சள்தூள் ½ ஸ்பூன்
மல்லித்தூள் 2 ஸ்பூன்
மிளகாய்தூள் 1 ஸ்பூன்
மிளகுத்தூள் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை

எப்படிச் செய்வது:

வட சட்டியை அடுப்பில் வைத்து அது சூடானதும் எண்ணெயை ஊற்றி முதலில் இஞ்சிப்பூண்டு விழுதை போட்டு அத்துடன் பச்சை மிளகாய்களை ஒடித்துப் போடவும்,பச்சை வாசனை போனதும் வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்த்து கொஞ்சம் உப்புச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறம் அடைந்ததும், தக்காளி சேர்த்து வதக்கவும்.இரண்டும் நன்றாக குழைவாக வெந்ததும் பொடிகளைப் போட்டு கிளறுங்கள்.

இப்போது உங்கள் ருசிக்கேற்றபடி உப்புச் சேர்த்து மறுபடியும் கிளறிவிட்டு சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டுத் துண்டுகளை அள்ளிப்போட்டு கிளறி விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மூடிவைத்து வேக விடுங்கள்.

நண்டில் இருந்து வெளிப்படும் நீங்கள் ஊற்றிய நீரும் வற்றியதும் ஒரு முறை கிளறிவிட்டு அரைமணி நேரம் மூடி வைத்திருந்து பிறகு சாப்பிடுங்கள்.

சூப்களின் மருத்துவ பலன்கள்




நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவுவகைகளும், சீரான உடற்பயிற்சியும் அவசியம்.

ஆனால் இன்றைய அவசர காலகட்டத்தில் சத்தான உணவுகளை உட்கொள்கிறோமா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான்.

துரித உணவுகளின் பக்கம் மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளதால், காய்கறிகள் என்றாலே சிலர் வெறுப்படைகின்றனர்.

அத்தகையர்கள் மிக எளிதாக சூப் வைத்து குடிக்கலாம், உணவிற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு சூப் குடித்தால் நல்ல பசியை தூண்டிவிடும்.

அதுமட்டுமின்றி காலை, மாலை வேளைகளில் குடித்து வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

* 50 முதல் 75 கிராம் முடக்கத்தான் இலை (அ) முடக்கத்தான் பொடி மூன்று டீஸ்பூன் எடுத்து நன்றாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும்.

இதில் வெங்காயம், தக்காளி, காரட், பீன்ஸ், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, பூண்டு, இஞ்சி சேர்த்து, மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து கொதிக்கவிட்டு மசிக்கவும்.

இதனை தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் சர்க்கரை நோய், வயிற்றுப்புண், மூட்டுவலி மற்றும் பக்கவாதம் குணமடையும்.

* பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வல்லாரை கீரையுடன் தேவையான காய்கறிகள் சேர்த்து சூப் செய்து குடிக்கலாம், இதேபோன்று பொன்னாங்கன்னி கீரையையும், முருங்கை கீரையையும் செய்து சாப்பிடலாம்.

இதன் மூலம் நினைவாற்றல் அதிகரிப்பதுடன் கண் சம்பந்தமான நோய்கள் சரியாகும், எலும்புகள் வலுப்பெறும்.

* இதேபோன்று துளசி அல்லது துளசி பொடியை நீர் சேர்த்து, தேவையான அளவு காய்கறிகள் சேர்த்து சூப் செய்து குடிக்கலாம்.

இவ்வாறு குடித்தால் ஆஸ்துமா நோய் சரியாகும், சளி- இருமல் இருக்காது.

வீட்டில் அதிகமாக இருக்கும் பல்லிகளை விரட்ட சில எளிய வழிமுறைகள்




கோடை காலத்தில் ஒருவரின் வீட்டில் பல்லி அதிகமாக இருப்பது மிகவும் பொதுவானது. அத்தகைய சூழ்நிலையில், பல்லிகளை எப்படி நம் வீட்டில் எளிய முறையில் விரட்டுவது…

பல்லிகளைப் பார்துத பயப்படுபவர்கள் பலர் இன்று உள்ளனர். ஆமாம், பல்லியைப் பார்த்தவுடன் மூச்சடக்கி நிற்பவர்கள் இன்றும் பலர் உள்ளனர். எனவே அவர்களுக்கு உதவும் வகையில் பல்லியை வீட்டிலிருந்து எளிய முறையில் வீட்டை வீட்டு விரட்டுவதற்கான சில வழிகளை நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

1. முட்டை ஓடு – உங்கள் வீட்டிலிருந்து பல்லியை விரட்ட விரும்பினால், முட்டை உடைக்கும் போதெல்லாம், அதை குப்பையில் எறிவதற்கு பதிலாக, பல்லிகள் அதிகம் இருக்கும் இடங்களில் வைக்கவும்.

2. பூண்டு – பல்லியை வீட்டை விட்டு வெளியேற்ற, ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் பூண்டின் ஒரு சில மொட்டுகளை தொங்க விடுங்கள்.

3. குளிர்ந்த நீர் – பல்லியை வீட்டிலிருந்து விரட்டியடிக்க, பல்லிகள் அதிகம் இருக்கும் பகுதியில் குளிர்ந்த நீரைத் தெளிக்கவும், இதன் பிறகு அந்த இடத்தில் மீண்டும் பல்லிகள் வராது.

4. நாப்தாலீன் பந்துகள்(பூச்சி உருண்டை) – பல்லியை வீட்டை விட்டு வெளியே விரட்ட, நாப்தலின் பந்துகளை பயன்படுத்துங்கள்.

5. காபி பவுடர் – பல்லியை வீட்டிலிருந்து அகற்ற, காபி பவுடர் மற்றும் சமையல் பட்டை ஆகியவற்றைக் கலந்து தடிமனான கரைசலை உருவாக்கவும். இப்போது இந்த கலவையை சிறு உருண்டைகளா உருவாக்கி பல்லி அதிகம் காணும் இடத்தில் வைக்க வேண்டும். பின்னர் இந்த இடத்திற்கு பல்லிகள் வராது.

தினமும் கொண்டை கடலை சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா


கொண்டைக்கடலையில் பலவித ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. முடி, நகம் மற்றும்  உடல் வளர்ச்சிக்கு புரோட்டீன் சத்து மிக முக்கியம். எனவே தினமும் 100 கிராம் கொண்டைக் கடலையினை உட்கொண்டு வரவது நல்லது.

கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 100 கிராம் கொண்டைக் கடலையில் கிட்டத்தட்ட 19 கிராம் நார்சத்து நிறைந்துள்ளது. உடல்  எடையினை குறைக்க நார்சத்து முக்கியம். தினமும் நார்சத்து உணவினை உண்டு வருபவர்களுக்கு மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.

கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 

முடியின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு புரதம் மிக மிக முக்கியம்.கொண்டைக்கடலையை புரதம், இரும்பு, ஜின்க் மற்றும் பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உங்களின் முடி ஆரோக்கியமாக வளர உதவும். மேலும் முடி கொட்டுதலை தடுக்கும். உங்களின் முடி வேரிலிருந்து வலுவாக வளர மிகவும் பயனுள்ளதாக  அமைகின்றது.
 
கொண்டைக் கடலையில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது. உங்கள் உணவுகளில் உள்ள கால்சியம் சத்தினை உரிய மெக்னீசியம்  சாது மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. மேலும் உங்கள் எலும்பு மற்றும் பற்களின் வலிமையினை அதிகரிக்கின்றது. எனவே உடல் உழைப்பு அதிகம்  உள்ளவர்கள் தினமும் கொண்டைக் கடலையினை உட்கொண்டு வந்தால் நிறைய பயன் பெறலாம்.

கொண்டைக் கடலையில் நார்ச்சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இவற்றை நீங்கள் தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் ஜீரண உறுப்புகள் மற்றும்  குடலின் ஆரோக்கியம் மேம்படும். 

கொண்டைக்கடலையில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. உங்கள் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க பொட்டாசியம் சாது மிக மிக முக்கியம். உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் தினமும் கொண்டைக்கடலையை ஒரு கைப்பிடி உண்டு வந்தால் அவர்களின் இரத்த அழுத்தம் குறைந்து மேம்படும்.

Friday, May 15, 2020

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 925 ஆக உயர்வு



Srilanka Colombo (News 1st) நாட்டில் Covid-19 தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 471 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Covid-19 தொற்றுக்குள்ளானவர்களில் 445 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேவையான சுகாதார வழிமுறைகளை திட்டமிட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இந்த மூவரடங்கிய குழுவை நியமித்துள்ளார்.

பொதுத் தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பில் இந்த குழு ஆராயவுள்ளது.

குழுவினூடாக கிடைக்கும் பரிந்துரைகளுக்கு அமைய, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தக்காளியானது முகச்சுருக்கத்தை விரட்டி இளமையானவராக மாற்றி விடும்.



நீண்ட நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும். இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள்.

இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் முகம் சூரியனாகப் பிரகாசிக்கும். சில பெண்களுக்கு முகத்தில் மென்மைத்தன்மை குறைந்து முரட்டுத்தனமாகத் தெரியும் இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியை எடுத்து கூழாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்து கொள்ளுங்கள்.

இதை முகத்துக்குப்பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் மிருதுவாகி தங்கம் போல் தக தகவென ஜொலிக்கும்.

சில பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி எதையோ பறிகொடுத்தது போல் வலம் வருவார்கள். இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான்.

ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.
இமைகளின் மேல் இந்த கலவையைப்பூசி, 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.

பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்றி விடும்.

இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம்.

தக்காளி சாறு- அரை டீஸ்பூன், 
தேன்அரை டீஸ்பூன், 
சமையல் சோடா- ஒரு சிட்டிகை. 

இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் 3 முறை இப்படி செய்து வந்தால் கருவளையமா அது எங்கே என்பார்கள்.

கண்ணாடியைப் பார்க்கவே பிடிக்காமல், கரும்புள்ளியும் கருந்திட்டுகளும் உங்கள் முகத்தை ஆக்ரமித்துக் கொண்டனவா? ரிலாக்ஸ் பிளீஸ்… உங்கள் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது. 

இந்த தக்காளி பேஸ்ட்!

உருளைக்கிழங்கு துருவல் சாறு- ஒரு டீஸ்பூன், 
தக்காளி விழுது- அரை டீஸ்பூன், இரண்டையும் கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து அதைச்செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும்.

கன்னங்கள் ஒட்டிப்போய் அழகற்றதாக காணப்படுகிறதா? முகத்தை புஸ் புஸ் என மாற்றிட இந்த தக்காளி கூழை பயன்படுத்துங்க.

தோல் மற்றும் விதை நீக்கிய ஒரு தக்காளியை கூழாக்குங்கள். ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணையை எடுங்கள்.

முதலில் முகத்தில் ஆலிவ் எண்ணையை தடவுங்கள். அதன் மேல் இந்தத் தக்காளி கூழைப் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

வாரம் ஒருமுறை இப்படி செய்து வர தக்காளி போன்ற கன்னங்கள் கிடைக்கும்.

மன உனைச்சலை தவிர்த்து வாழ்ந்தால் உங்கள் உடல் இளமையாக இருக்கும்



சிரிச்சீங்கன்னா உங்க ரத்த நாளங்கள் ரிலாக்ஸ் ஆகி அதிக ரத்தத்தை பாய்ச்சும்! கடுகடுத்தீங்கன்னா, எதிர்மறை நடக்கும். ரத்தம் குறைஞ்சு ஏக டென்ஷன்.

நல்லா மூச்சு எடுங்க

இது பிரணாயாமம் இல்லை. ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம், எலுமிச்சை, மல்லிகை,  துளசி போன்ற வாசனைகள் நல்லா முகர்ந்து பாருங்க! லினாலூல்ய் என்ற ஒரு கலவை இதில் உள்ளது. அது படபடப்பை குறைக்கும் சக்தி கொண்டது.

சூயிங்கம்

பசக் பசக் என்று சத்தம் போட்டு மற்றவர்களை எரிச்சல்படுத்தாமல், அமைதியாக மெல்லுங்கள். ‘சூயிங்கம், படபடப்பை குறைக்கும்’ என ஒரு சூயிங்கம் நிறுவனத்தார் ஆய்வு செய்து கூறியுள்ளனர்.

பிளாக் டீ 

பால் இல்லாமல் சக்கரை இல்லாமல் வெறும் தேநீரை குடித்து வர, நோய் டென்ஷன். உடலில் உள்ள சர்க்கரை அளவும் குறையும்!

‘சீ க்யுகாங்’ என்ற சீன பயிற்சி
சுவரை பார்த்தபடி நில்லுங்கள். தலையை இடது புறமாக திருப்பும் போது மூச்சை இழுங்கள். தலையை மீண்டும் நடுநிலைக்கு கொண்டு வரும் போது மூச்சை விடுங்கள். இப்படியே லெஃப்ட், ரைட் செய்து வர, சில நிமிடங்களில் நோ டென்ஷன்.

வாட்ஸ் அப் மூலம் பெண்களை தொடரும் ஆபத்து



பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று! தற்போது  வாட்ஸ் அப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது. ‘வாட்ஸ்அப் என்பது தனிநபர் தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ் தானே அதில் என்ன வரப்போகிறது ஆபத்து?’ என்பது உங்கள் கேள்வியாய் இருந்தால் நிச்சயம் இருக்கிறது என்பதுதான் பதில். இப்போது என்னென்ன ஆபத்துகள் வரும் என்பதை பார்க்கலாம்

* யாருக்காவது உங்கள் செல்போன் நம்பர் கிடைத்தால் மட்டுமே போதும். நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்தால் அவர்களால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பார்க்கவும், உங்கள் புகைப்படத்தை டவுன்லோடு செய்யவும் முடியும்.

* உங்களுக்கு தெரியாத நபர்கள் கூட உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களை தொடர முடியும்.

* கடைசியாக நீங்கள் எப்போது உங்கள் கணக்கை பார்த்துள்ளீர்கள் என்பதை கூட அவர்களால் அடையாளம் காணமுடியும்.

* உங்களுக்கு எதிர்முனை நபர் யார் என்று தெரியாத போது அவர் தவறான பெயரில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை பெற வாய்ப்புள்ளது.

* உங்களது நண்பர்களில் சிலர் வாட்ஸ்அப் குருப்களில் உங்கள் பெயரையும் இணைக்கும் போது உங்கள் எண் குரூப்பில் உள்ள அனைவருக்கும் பகிரப்பட வாய்ப்புள்ளது.




இதை எப்படி தவிர்க்கலாம்?

உங்களது வாட்ஸ் அப் தொந்தரவுகளை எப்படி தவிர்க்கலாம் என்றால் உங்கள் வாட்ஸ்அப் அமைப்பில்(செட்டிங்) உங்களது ப்ரைவஸி செட்டிங்கை மாற்றியமைப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம். உங்களது பிரைவஸி செட்டிங்கிற்கு சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் ஆகியவற்றை My Contacts அல்லது Only me ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களை பாதுகாக்கலாம்.

குரூப்களில் பெரும்பாலும் இணைவதையும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதுமட்டுமின்றி ப்ளாக் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தொல்லை தருபவரை உங்கள் கணக்கை தொடராமல் தடுக்கும் வசதியும் வாட்ஸ்அப்பில் உள்ளது.

முடிந்த வரை தெரிந்தவர்களோடு மட்டும் வாட்ஸ்அப்பில் பேசுவது பாதுகாப்பானது. ஒருவேளை இதனை செய்ய தவறும்போது ஏற்படும் பாதிப்புகள் சமூக வலைதளங்களைவிட மோசமானதாக இருக்கும்

ஆப்பிள் லஸ்ஸி எப்படிச் செய்வது





தேவையான பொருட்கள் :

கிரீன் ஆப்பிள் – 2
தயிர் – 2 கப்
பால் – கால் கப்
தண்ணீர் – கால் கப்
தேன் – 2 ஸ்பூன்

செய்முறை :

• கிரீன் ஆப்பிளை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

• மிக்சியில் ஆப்பிள், தயிர், பால், தண்ணீர், தேன் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

• அரைத்த லஸ்ஸியில் ஐஸ் கியூப்ஸ் சேர்த்து பருகவும்.

• வெயிலுக்கு இதம் தரும் இந்த லஸ்ஸி.

Thursday, May 14, 2020

Live Singing with singer - @antonybala



He trained in classical music and worked as a music teacher.

He also a singer in " Thalam music group" from Germany 

Srilankan Time night 7.00pm - 8.00pm
German time  3.30pm - 4.30pm


சுவை மிகுந்த புளியோதரை செய்முறை





தேவையான பொருட்கள்:

வேகவைத்த சாதம் - 2 கப்
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:


நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கடலைப் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
வேர்க்கடலை - 1 மேஜைக்கரண்டி
மிளகாய் வத்தல் - 2


வறுத்து பொடிக்க வேண்டியவை:


மிளகாய் வத்தல் - 2
தனியா - 1 மேஜைக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 மேஜைக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
எள்ளு - 1 மேஜைக்கரண்டி


செய்முறை:

அடுப்பில் வெறும் கடாயில் மிளகாய் வத்தல், தனியா விதை, வெந்தயம், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் எள்ளு சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை ஆப்  செய்து விடவும். நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

புளியை 200 மில்லி தண்ணீரில் உறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து நல்வெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு  தாளிக்கவும்.

கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல், கடலைப்பருப்பு வேர்க்கடலை கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். பின்னர் பெருங்காயத்தூள் சேர்க்கவும். புளித் தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

புளிக் காய்ச்சல் கெட்டியானதும் உப்பு மற்றும் வறுத்து பொடித்த  தூளை சேர்த்து கிளறி அடுப்பை ஆப் பண்ணவும். ஆற வைத்துள்ள சாதத்தில் தேவையான அளவு புளிக்காய்ச்சலை சேர்த்து கிளறவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது  சேர்த்துக் கொள்ளவும். சுவையான புளி சாதம் தயார்.

நாட்டுக்கோழி குழம்பு எளிய முறையில் தயாரிக்கும் முறை



தேவையான பொருள்கள்:

நாட்டுக்கோழி - 1/2 கிலோ 
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
தயிர்  - 2 மேஜைக்கரண்டி 
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 
கொத்தமல்லித்தழை - சிறிது 
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி 
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
வறுத்து திரிக்க -
மிளகாய் வத்தல் -5
கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி 
சீரகம் - 1 மேஜைக்கரண்டி 
மிளகு - 1 மேஜைக்கரண்டி 
வறுத்து அரைக்க -
தேங்காய் துருவல் - 100 கிராம்

              
தாளிக்க தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
பட்டை - 1 இன்ச் அளவு 
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு





செய்முறை


முதலில் கோழி துண்டுகளை நன்கு சுத்தப்படுத்தி வைக்கவும். தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக வெட்டி வைக்கவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, சீரகம், மிளகு எல்லாவற்றையும் போட்டு கிளறி அடுப்பை அணைத்து விட்டு  சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பிறகு மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும்.
   
தேங்காயையும் நன்கு வறுத்து மிக்ஸ்சியில் அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு கறிவேப்பில்லை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை   வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். 
                       
தக்காளி நன்கு வதங்கியதும் தயிர், திரித்து வைத்துள்ள பொடி, கரம் மசாலா தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் உப்பும் கோழித்துண்டுகளையும் சேர்த்து மசாலா எல்லா இடங்களிலும் படும் படி நன்கு கிளறி விடவும். பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மசாலா வாடை  போகும் வரை கொதிக்க விடவும்.                                                               

மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான நாட்டுக்கோழி குழம்பு தயார்.      

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம் பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன

கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதை சமூக ஆர்வலர்கள் கவலையுடன் பார்த்து வருகின்றனர். ஒரு குற்றம் நடந்தபின்னர் காவல்துறை அதற்குரிய விசாரணை செய்து தண்டனையும் குற்றவாளிகளுக்கு வாங்கி கொடுக்கின்றது. ஆனால் அந்த குற்றம் நடைபெறாமல் தடுப்பது ஒரு சமூகத்திடம்தான் உள்ளது. குறிப்பாக ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் அந்த கடமை உள்ளது.

முன்பெல்லாம் வீட்டில் உள்ள பெரியோர்கள், தாத்தா பாட்டிகள் குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை சொல்லும் வழக்கம் இருந்தது. ஆனால் இப்போது அப்பா ஒரு பக்கம் மொபைலில் ஏதாவது பார்த்து கொண்டிருப்பார், அம்மா சீரியல் பார்த்து கொண்டிருப்பார், குழந்தைகள் இன்னொரு புறம் மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் எதையாவது பார்த்து கொண்டிருப்பார்கள். ஒரே வீட்டில் இருந்தாலும் குழந்தைகளுடன் பெற்றோர்கள் செலவிடும் நேரம் மிக குறைவாக உள்ளது. அப்படியே குழந்தைகளிடம் பேசினாலும் அவர்களுக்கு நீதிபோதனை, அறிவுரைக்கதைகள் சொல்லி கொடுக்கும் வழக்கம் இப்போது சுத்தமாக இல்லை

ஒரு குடும்பத்தில் ஜனநாயகமான தன்மையோடும், எது பற்றியும் தயக்கமில்லாமல் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளூம் வழக்கத்தையும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டியது பெற்றோரின் அடிப்படை கடமை. இன்னும் சொல்ல போனால் அது குழந்தையின் உரிமையும்கூட.



ஒரு குற்றம் நடந்தபின்னர் அந்த குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையோ அல்லது குற்றம் நடந்த பகுதியின் காவல் துறை அதிகாரியைப் பணிமாற்றம் செய்தாலோ குற்றங்கள் குறையாது. குற்றங்களைக் குறைப்பதும், குற்றங்கள் இல்லாத சூழலை உருவாக்குவதும் எப்படி ஒரு அரசின் தலையாய கடமையோ அதேபோல் குழந்தைகள் மனதில் குற்றங்கள் செய்யும் மனப்பான்மை இல்லாமல் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை.

இதைப் பற்றி சிந்திக்க யாருக்குமே நேரம் இல்லாததால் தான் குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.  நல்ல சமூகமாக நாம் இருக்க வேண்டுமென்றால், குழந்தைகளுக்கு ஆடம்பரப் பொருளை வாங்கித் தருவதில் கவனம் செலுத்தாமல், நல்ல கல்வி, நல்ல இயற்கை சூழல், நல்ல பழக்கவழக்கங்கள், சமூக அக்கறை, குடும்பச் சூழல், ஆண் பெண் புரிதல் இவற்றைப் போதிக்க வேண்டும். அவர்கள் வளர்ந்த பின்பு கிடைக்கும் நல்ல சூழ்நிலைகள் மூலமே குற்றங்களைக் குறைக்க முடியும். வெறும் சட்டங்களை இயற்றினால் குற்றங்கள் ஒழியாது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்

இந்த ஒரு பொருளை எப்போதும் வைத்திருங்க பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

மாதச்சம்பளம் வாங்குபவர்களில் வெகு சிலர் மட்டுமே பாக்கெட்டில் பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கத்தை விடாமல் தொடர்ந்து பின்பற்றி வருபவர்கள்.

அடுத்தவர்கள் வைத்திருக்கும் பர்ஸை பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவதோடு சரி. அதற்கு முக்கிய காரணம் வாங்கும் சம்பளம், வாங்கிய அன்றைக்கே காணாமல் போவது தான்.

கையில வாங்குனேன் பையில போடலே… காசு போண எடம் தெரியல என்று பாட்டு பாடியே நாட்களை நகர்த்திக் கொண்டு வருபவர்கள். எப்பவும் பர்ஸ் நிறைய பணம் இருக்கணுமா? இதை படிக்கவும்.

நம்முடைய பர்ஸில் குறிப்பாக ஒரு ரூபாய் நாணயமும், இருபது ரூபாய் நோட்டும் அவசியம் இருக்கவேண்டும். இந்த இரண்டையும் எப்போதும் செலவழிக்கவே கூடாது.

என்னதான் தவிர்க்க முடியாத சூழ்நிலையாக இருந்தாலும் கூட அதை எடுத்து செலவழிக்கவே கூடாது.

நாம் வைத்திருக்கும் பர்ஸானது நம்முடைய கை காசை போட்டு வாங்கவே கூடாது. நம்முடைய மனதுக்கு பிடித்தமானவர் அல்லது அம்மா, அப்பா, மனைவி, குழந்தை என பிரியமானவர்கள் யாராவது வாங்கிக் கொடுத்த பர்ஸாக இருக்க வேண்டியது அவசியமாகும். அப்படி இருந்தால் தான் நம்முடைய பர்ஸில் பணம் நிரந்தரமாக இருக்கும்.




நாம் வைத்திருக்கும் பர்ஸில் எப்போதும் பணம் இருக்க வேண்டும் என்றால், அதை முறையாக பராமரிப்பது அவசியமாகும்.

மேலும் நாம் வைத்திருக்கும் பர்ஸும் அழகாகவும், பணத்தை ஈர்க்கும் வகையிலும் இருக்கவேண்டியது அவசியமாகும்.

அதற்கு நாம் வாங்கும் பர்ஸானது அழகிய பச்சை வண்ணம், பர்ப்பிள், நேவி ப்ளூ, பிங்க் போன்ற நிறங்களில் இருக்க வேண்டியது அவசியம்.

அப்படி இருந்தால் பர்ஸில் பணம் எளிதில் சேரும். மேலும் நாம் வாங்கும் பர்ஸும் ரூபாய் நோட்டுக்கள் கசங்காமல் எளில் நுழையும் வகையில் இருக்க வேண்டியது அவசியம்.

பச்சை நிற பட்டுத் துணி அல்லது பச்சை காகிதத்தில் ஏலக்காய், கொஞ்சம் சோம்பு, பச்சைக் கற்பூரம் போட்டு கட்டி அதை பர்ஸில் வைத்துக் கொண்டால், பணம் அநாவசியமாக செலவாகாது.

கூடவே நம்மை கடன் வாங்குதில் இருந்து தப்பிக்க வைக்கும்.

கடன் வாங்கக்கூடாது என்ற எண்ணத்தை அதிகரிக்கச் செய்யும் என்பது நிச்சயம்.

ஒருவேளை நாம் ஏற்கனவே கடன் வாங்கியிருந்தாலும் கூட, வெகு சீக்கிரத்தில் அந்த கடனை அடைக்கும் வகையில் நம்முடைய பர்ஸில் பணம் சேர்ந்துவிடும்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது





வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்திற்குள் உங்கள் உடலில் என்ன மாற்றங்கள். நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது.

டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.


ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது.

இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலே காற்றில் சுற்றித் திரியும் நோய் கிருமிகள் தாக்கும் அபாயம் உள்ளது





நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்கினால் அது கிருமித்தொற்று, வைரஸ்களோடு போராடி உடலைப் பாதுகாக்கும்.வைட்டமின் சி அதிகம் காணப்படும் நெல்லிக்காய் அல்லது கொய்யாவை, குடை, மிளகாய் உடன் சேர்த்து சாலட்டாக செய்து தினமும் உணவில் எடுத்து கொள்ளலாம். அல்லது தினமும் 2 தக்காளிப் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


நச்சுகள், குடற் பூச்சிகள் போன்றவை அழிகின்றன.2 கிராம் சுத்தமான பூண்டுவை 2 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 7 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளலாம். இஞ்சி மற்றும் பூண்டுவை அரைத்து, சட்னி அல்லது குழம்பு வைத்து உணவில் எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் கொரோனா வைரசில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.சுவாசகோளாறை சரிசெய்வதில் துளசி முக்கிய பங்காற்றுகிறது. எனவே, துளசி இலைகளை பயன்படுத்தி தேநீர் தயாரித்து குடிக்கலாம். 


இஞ்சியுடன் துளசியை சேர்த்து ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்.அன்னாசி பூ ரத்தத்தில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் வல்லமை உள்ளது. எனவே, இந்த பூவை பொடியாக்கி தேநீருடன் கலந்து தினமும் 100 மில்லி அளவுக்கு குடித்துவருவது நல்லது.
எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் ஆகியவற்றுடன் இஞ்சி சிறிது சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். இஞ்சியில் உள்ள வேதிப் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த சாறை உணவிற்கு பின் எடுக்க வேண்டும்.




ஒமேகா 3 அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வால்ட் நட் மற்றும் மீன்களில் மற்றும் அதிக அளவு ஒமேகா 3 அமிலம் காணப்படுகிறது. மீன் சமைக்கும் போது அதில் சிறிதளவு வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது நல்லது.தினமும் உணவில் 2 கிராம் கருஞ்சீரகத்தை எடுத்து கொள்ள வேண்டும். அதில் உள்ள உயிர் வேதியியல் சத்துகள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.சர்க்கரைவள்ளி கிழங்குடன் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து உணவில் சேர்த்து கொள்ளலாம்.


சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, சி மற்றும் இரும்புச்சத்துகள் உள்ளன.முருங்கைக் கீரையில் உள்ள சத்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. முருங்கைக்கீரை ரத்தத்தை சுத்தம் செய்வதுடன், எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.பப்பாளி : பப்பாளியும் வைட்டமின் C சத்துக்கு சிறந்த பழம். இது செரிமானத்தை எளிதாகத் தூண்டி தேவையான சத்துக்களை அளிக்கவல்லது. பொட்டாசியம், வைட்டமின் B போன்ற சத்துக்களும் இருப்பது கூடுதல் நன்மையளிக்கும்

முகத்தில் உள்ள கருமையான படலத்தை ரோஸ் வாட்டரைக் கொண்டு நீக்குவது எப்படி


பழங்காலம் முதலாக ரோஸ் வாட்டர் அழகு பராமரிப்பு பொருளாகப் பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது டோனராக இருக்கட்டும் அல்லது ஃபேஸ் பேக்கில் ஆகட்டும், அனைத்திலும் சருமத்தின் நிறத்தை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. 

தற்போது சரும நிறத்தை அதிகரிக்க கடைகளில் என்ன தான் பல க்ரீம்கள் விற்கப்பட்டாலும், அதனால் பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடுவதால், ஏராளமானோர் இயற்கை வழிகளை நாட ஆரம்பித்துவிட்டனர். இங்கு ரோஸ் வாட்டரைக் கொண்டு சருமத்தின் நிறத்தை எப்படி அதிகரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்து உங்கள் அழகை மெருகேற்றிக் கொள்ளுங்கள். 

முல்தானி மெட்டி

 முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மறைந்து, சருமம் பொலிவோடும் வெள்ளையாகவும் காட்சியளிக்கும். 

கடலை மாவு 

கடலை மாவை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதைக் காணலாம். 

தக்காளி சாறு 

கோடையில் சருமத்தின் நிறம் எளிதில் கருமையடையும். இதனைத் தடுக்க, வெளியே வெயிலில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், தக்காளி சாற்றில் ரோஸ் வாட்டரைக் கலந்து, முகம், கை, கால்களில் தடவி உலர்ந்ததும், நீரில் நனைத்த பஞ்சு கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் கோடையில் சருமம் கருமையடைவதைத் தடுக்கலாம். 

உருளைக்கிழங்கு 

வாரத்திற்கு ஒருமுறை உருளைக்கிழங்கை அரைத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் மற்றும் கை, கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் சரும நிறம் அதிகரிக்கும். 

சோம்பு 

முகப்பரு மற்றும் அதன் தழும்புகளுடன் வெளியே செல்வது என்பது கஷ்டமான ஒன்றாக இருக்கும். ஆனால் ரோஸ் வாட்டர் முகப்பருக்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். அதிலும் ரோஸ் வாட்டரில் ஊற வைத்து சோம்பை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர்ந்ததும் கழுவ, நல்ல பலனைக் காணலாம். தயிர் இரவில் படுக்கும் முன் ரோஜாப்பூ இதழ்களை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொண்டு, பின் ரோஜாப்பூ இதழ்களை அரைத்து பேஸ்ட் செய்து, தயிர் மற்றும் வடிகட்டி வைத்துள்ள நீருடன் கலந்து, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி உலர வைத்து கழுவ, சருமம் மென்மையாவதோடு, பொலிவோடும் இருக்கும். 

சந்தனப் பொடி 

சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ, முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் மறைவதோடு, வெள்ளையான சருமத்தையும் பெறலாம். முட்டை மற்றும் தேன் முட்டையின் வெள்ளைக்கருவுடன் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ, சருமத்தில் உள்ள முதுமை கோடுகள் மற்றும் சுருக்கங்கள் நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும். 

மாங்காய் 

மாங்காயை அரைத்து ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, அதில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்றவை சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை அழகாக வெளிக்காட்டும். ரோஸ் வாட்டர் ரோஸ் வாட்டரைக் கொண்டு தினமும் காலையிலும், இரவிலும் முகத்தை துடைத்து எடுப்பதன் மூலம், சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமத்தின் நிறம் மேம்பட்டு காணப்படும்.



பழங்காலம் முதலாக ரோஸ் வாட்டர் அழகு பராமரிப்பு பொருளாகப் பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது டோனராக இருக்கட்டும் அல்லது ஃபேஸ் பேக்கில் ஆகட்டும், அனைத்திலும் சருமத்தின் நிறத்தை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. 

தற்போது சரும நிறத்தை அதிகரிக்க கடைகளில் என்ன தான் பல க்ரீம்கள் விற்கப்பட்டாலும், அதனால் பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடுவதால், ஏராளமானோர் இயற்கை வழிகளை நாட ஆரம்பித்துவிட்டனர். இங்கு ரோஸ் வாட்டரைக் கொண்டு சருமத்தின் நிறத்தை எப்படி அதிகரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்து உங்கள் அழகை மெருகேற்றிக் கொள்ளுங்கள். 

முல்தானி மெட்டி

 முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மறைந்து, சருமம் பொலிவோடும் வெள்ளையாகவும் காட்சியளிக்கும். 

கடலை மாவு 

கடலை மாவை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதைக் காணலாம். 

தக்காளி சாறு 

கோடையில் சருமத்தின் நிறம் எளிதில் கருமையடையும். இதனைத் தடுக்க, வெளியே வெயிலில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், தக்காளி சாற்றில் ரோஸ் வாட்டரைக் கலந்து, முகம், கை, கால்களில் தடவி உலர்ந்ததும், நீரில் நனைத்த பஞ்சு கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் கோடையில் சருமம் கருமையடைவதைத் தடுக்கலாம். 

உருளைக்கிழங்கு 

வாரத்திற்கு ஒருமுறை உருளைக்கிழங்கை அரைத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் மற்றும் கை, கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் சரும நிறம் அதிகரிக்கும். 

சோம்பு 

முகப்பரு மற்றும் அதன் தழும்புகளுடன் வெளியே செல்வது என்பது கஷ்டமான ஒன்றாக இருக்கும். ஆனால் ரோஸ் வாட்டர் முகப்பருக்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். அதிலும் ரோஸ் வாட்டரில் ஊற வைத்து சோம்பை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர்ந்ததும் கழுவ, நல்ல பலனைக் காணலாம். தயிர் இரவில் படுக்கும் முன் ரோஜாப்பூ இதழ்களை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொண்டு, பின் ரோஜாப்பூ இதழ்களை அரைத்து பேஸ்ட் செய்து, தயிர் மற்றும் வடிகட்டி வைத்துள்ள நீருடன் கலந்து, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி உலர வைத்து கழுவ, சருமம் மென்மையாவதோடு, பொலிவோடும் இருக்கும். 

சந்தனப் பொடி 

சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ, முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் மறைவதோடு, வெள்ளையான சருமத்தையும் பெறலாம். முட்டை மற்றும் தேன் முட்டையின் வெள்ளைக்கருவுடன் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ, சருமத்தில் உள்ள முதுமை கோடுகள் மற்றும் சுருக்கங்கள் நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும். 

மாங்காய் 

மாங்காயை அரைத்து ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, அதில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்றவை சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை அழகாக வெளிக்காட்டும். ரோஸ் வாட்டர் ரோஸ் வாட்டரைக் கொண்டு தினமும் காலையிலும், இரவிலும் முகத்தை துடைத்து எடுப்பதன் மூலம், சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமத்தின் நிறம் மேம்பட்டு காணப்படும்.

கோடை காலத்தில் சருமத்தை பாதுகாப்பதற்கான அழகுகுறிப்பு


வாழைப்பழத்தை மசித்து அதில் பால் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். 

இப்படி தினமும் 2,முறை செய்து வந்தால் இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம். 

ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும். மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து பின் கழுவவேண்டும். இப்படி செய்துவந்தால் சூரியக்கதிர்களால் கருமையான சருமம் பொலிவோடு மின்னும்.

Wednesday, May 13, 2020

காரமான தக்காளி மீன் குழம்பு செய்வதற்கான எளிய செய்முறை




தேவையான பொருட்கள்:

மீன் – 6-7 துண்டுகள்

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

தக்காளி – 6 (அரைத்தது)

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 6-8 பற்கள்

கறிவேப்பிலை – சிறிது

சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிது

புளி – 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)

தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்



செய்முறை: 

முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகலமான மற்றும் தட்டையான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலையை சேர்த்து வறுத்து, பின் அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வறுத்து, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, 8-10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து, அதில் மிளகாய் தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். 

பின் அதின் மீன் துண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் மீனை வேக வைக்க வேண்டும். மீனானது நன்கு வெந்ததும், அதில் புளிச்சாறு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், காரமான தக்காளி மீன் குழம்பு ரெடி!

வேலை பார்க்கும் இடத்தில் வரும் காதல் பெரும்பாலும் வேதனையைத்தான் தரும் வேலை பார்க்கும் இடத்து காதலையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பார்ப்போம்





1 . வேலையில் கவனக் குறைவு:

ஆண்களும், பெண்களும் ஒன்றாக அனைத்து இடங்களிலும் வேலைபார்க்கிறார்கள். வேலை பார்க்கும் இடத்திலே காதல் வசப்படுவது, வேலையில் இருக்கும் அவர்களது கவனத்தை குறைத்துவிடுகிறது. திறமையானவர்கள்கூட காதல்வசப்  படும்போது, திறமையை பணியில் காட்டாமல் காதலில் காட்டிவிடுகிறார்கள்.

அதனால் தவறுகள் நிகழும்போது, அலுவலகத்தில் பிரச்சினைகள் தோன்றும். அலுவலகத்தில் பணியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். ஏன்என்றால் அங்கு நடக்கும் சிறிய தவறுகூட பெரிய இழப்புகளை எற்படுத்திவிடும். காதலனும், காதலியும் ஒரே இடத்தில் வேலை பார்க்கும்போது ஒருவர் மீதுதான் இன்னொருவர் கவனம் இருக்குமே தவிர, வேலையின் மீது முழு கவனமும் செல்லாது.

ஒரு ஜோடி காதலிப்பது தெரிந்துவிட்டால், இருவரில் யார் இயல்பாக தவறு செய்தாலும், அதற்கு காதல் சாயம் பூசிவிடுவார்கள். அதனால் தவறு பெரிதாக்கப்பட்டு, வேலையையே இழக்கும் சூழ்நிலை உருவாகிவிடும். காதலை எல்லோரும் புனிதமாக பார்ப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் அதற்கு தவறான அர்த்தம் கற்பிப்பார்கள்.

அப்படிப்பட்டவர்கள் அலுவலகத்தில் இருந்தால், அந்த காதல் தவறாக பார்க்கப்பட்டுவிடும். அதுமட்டுமின்றி சிலருக்கு அடுத்தவர்களின் காதல் பொறாமையை ஏற்படுத்தும். பொறாமையால் வதந்தியை கிளப்பிவிட்டு, காதலுக்கே களங்கம் ஏற்படுத்திவிடவும் செய்வார்கள். அதனால் வேலை பார்க்கும் இடத்தில் வேலையை மட்டும் பாருங்கள்.

2.குறுஞ்செய்திகள்:

குறுஞ்செய்திகள் என்னவோ சிறியவைதான். அதற்காக செலவழிக்கும் நேரம் பெரிது. எதிர்பார்ப்புகள் அதைவிட பெரிது. அலுவலக நேரத்தில் வாட்ஸ் அப்பில் புகைப்படம் அனுப்புவது, குறுஞ்செய்திகள் அனுப்புவது இதெல்லாம் எவ்வளவு நேரத்தை வீணடிக்கச் செய்யும் என்பது தெரியுமா? ஒன்றுமில்லாத விஷயத்திற்கெல்லாம் ‘மெசெஜ்’ அனுப்புவார்கள். அதற்கு பதில் எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் வேலையில் இருந்த கவனம் சிதறிவிடும். இதெல்லாம் அலுவலகத்தில் தேவையற்றது. இது வேலையை முற்றிலுமாக பாதிக்கச் செய்துவிடும்.

3. தவறுகளை மறைத்தல்:

சிலருக்கு ஆர்டர்கள் பெறுவது, பொருட்களை சப்ளை செய்வது, வாடிக்கையாளர்களை சந்திப்பது போன்றவைதான் வேலையாக இருக்கும். அவர்கள் காதல்வசப்பட்டுவிட்டால், காதலியோடு ஊர்சுற்றத் தொடங்கிவிடுகிறார்கள். ஊர்சுற்றுவதுதான் வேலை என்பதால் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று அவர்கள் நினைத்தாலும், விரைவாகவே அது வெளியே தெரிந்துவிடும்.

வெளியே தெரிய தாமதமானாலும் அதற்குள் அவரது அலுவலக இலக்கில் குறைபாடு தோன்றி விடும். சரியாக ஆர்டர் எடுக்காமலோ, சப்ளை செய்யாமலோ சொதப்பிவிடுவார்கள். அதனால் அலுவலகத்தில் அவர்கள் பெயர் கெட்டுவிடும். பணி தொடர்புடைய வளர்ச்சியும் பாதிக்கப்படும். பூங்கா, சினிமா தியேட்டர் என்று சுற்றி, சேமிப்பை கரைத்து, கடன் வாங்கி செலவு செய்யும் நிலைக்கும் சென்றுவிடுவார்கள்.



4.தவறுகளை மறைத்தல்:

மேலதிகாரியாக இருப்பவர் ஆண் என்றால், அவருக்கு கீழ் வேலை பார்க்கும் அனைத்து பெண்களையும் அவர் சமமாக பாவிக்கவேண்டும். அவர், அந்த பெண்களில் ஒருத்தி மீது காதல்வசப்பட்டுவிட்டால் அவளுக்கு சாதகமாக நடந்துகொள்ளத் தொடங்குவார். அவளுக்கு நிறைய சலுகைகளை வழங்குவார். அவள் செய்யும் தவறுகளையும் மறைத்துவிடுவார். சிலரோ தன் காதலி செய்யும் தவறை மறைக்க, வேறு யார் மீதாவது அந்த பழியை போட்டுவிடவும் செய்வார்கள். அவர்கள் இருவரும் அலுவலகத்தில் இருக்கும்போது தங்கள் பணி என்ன என்பதை மறந்து காதல் கொள்ளும்போது, அடுத்தவர்களுக்கு கேலிப்பொருளாகவும் அவர்கள் மாறிவிடுவார்கள்.

5.நண்பர்களை புறக்கணித்தல்:

காதலிக்கும்போது காதலி, காதலனை நோக்கியும்– காதலன், காதலியை நோக்கியும் ஈர்க்கப்படுகிறார்கள். காதலனே தனது உலகம் என்று காதலியும், காதலியே தனது உலகம் என்று காதலனும் கருதுவதால், அதுவரை அவர்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றிருந்த நண்பர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

அந்த நண்பர்களின் உதவி அலுவலக பணிக்கு தேவை என்கிற நிலையில் அவர்களை புறக்கணித்தால், அதன் மூலம் அலுவலக பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுவிடும். அலுவலகத்திலே அழகான பெண், ஒருவருக்கு காதலியாகிவிட்டால் அவர் தனது தலையில் ஏதோ புதிய மகுடம் ஒன்றை சூட்டிக்கொண்டதுபோல் கர்வமடைந்துவிடுவார்.

அந்த கர்வம் இயல்பாகவே நல்ல நண்பர்களைக்கூட அவரைவிட்டு பிரியவைத்துவிடும். அப்படிப்பட்டவர்கள் எதிர்காலத்தில் நல்ல நண்பர்கள் கிடைக்காமல் தவிக்கவேண்டியதாகிவிடும்.

6.தேவையற்ற பேச்சு:

அலுவலக வேலை என்பது எல்லோருக்குமே ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். அந்த அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற்று, மீண்டும் மனதை உற்சாகப்படுத்திக்கொள்ள அலுவலக நேரத்தில் இடைவெளி கிடைக்கிறது. அந்த சில நிமிட நேரத்தை பயனுள்ள வழியில் கழிப்பதுதான் சிறந்ததாக இருக்கும்.

ஆணும், பெண்ணும் நண்பர்களாக இருக்கும்போது அலுவலக ஓய்வு நேரத்தை, நல்லபடியாக கழிக்கிறார்கள். அந்த நேரத்தில்கூட தங்கள் பணி பற்றியும், அலுவலக வேலை சூழல் பற்றியும் விவாதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் காதலர்களாகிவிட்டால், அவர்கள் பேச்சு முழுவதும் காதலை சுற்றித்தான் செல்கிறது. அரட்டை அடிப்பது, பொழுதுபோக்குவது போன்று நேரத்தை செலவிட்டு விடுகிறார்கள்.

அப்போது பேசப்படும் விஷயங்கள் அவர்கள் இருவருக்கும் தேவையற்ற பேச்சாக அமைந்துவிடும். அதை பார்ப்பவர்கள் அவர்கள் இருவரையும் தேவையற்ற பேச்சுக்களால் துளைத்தெடுத்துவிடுவார்கள்.

7.பண– நேர இழப்பு:

இன்றைய காதலில் சுயநலம் அதிகம். தன்னுடைய வேலையை பகிர்ந்துகொள்ளவும், தனக்கு தேவைப்படும்போது பண உதவி பெறவும் சில பெண்கள், ஆண்களை திட்டமிட்டு காதலிப்பார்கள். அவர்   களும் விவரம் தெரியாமல் தனக்கும் ஒரு காதலி கிடைத்துவிட்டாள் என்ற சந்தோஷத்தில் எதை எல்லாம் கொடுக்க முடியுமோ அதை எல்லாம் கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.

அப்போது சில நேரங்களில் அலுவலக நேரமும், பணமும்கூட தவறான வழிகளில் செலவிடப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். பிற்காலத்தில் அது சமாளிக்க முடியாத சிக்கலை தோற்றுவித்துவிடும். அப்படி ஒரு சிக்கல் ஏற்படும்போது காதலி அவரை விட்டு பிரிந்துகூட சென்றிருக்கலாம். அதனால் அலுவலக காதல் விதிமுறைகளை மீறாத அமைதியான காதலாக இருக்கவேண்டியது அவசியமாகிறது.

8.கண்காணிப்பு:

இப்போது அலுவலகங்களில் நவீன தொழில்நுட்ப முறைகளை கையாண்டு கண்காணிக்கிறார்கள். மனிதர்களின் கண்களில் இருந்து தப்பித்தாலும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்களின் கண்களில் இருந்து தப்ப முடிவதில்லை. காதலர்கள் அலுவலகத்தில் எவ்வளவு கவனமாக இருந்து காதலை வளர்த்துக்கொண்டிருந்தாலும், விரைவாகவே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிடுகிறார்கள்.

அப்போது இருவரும் இருவேறு கிளைகளுக்கு மாற்றப்படுகிறார்கள். அதனால் ‘ஏண்டா காதலித்தோம்!’ என்று கவலைப்படும் நிலைக்கு பலர் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பிரிந்து வெவ்வேறு ஊருக்கு செல்லும்போது அவர்களிடம் இருந்து காதலும் பிரிந்து திசைமாறிப் போய்விடுகிறது.

உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தையுடன் ஒப்பிடாதீங்க




பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவது, மற்றவர்கள் முன் சதா குறை கூறுவது குழந்தைகள் மனதை புண்படுத்தும் விஷயமாகும்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவது, மற்றவர்கள் முன் சதா குறை கூறுவது குழந்தைகள் மனதை புண்படுத்தும் விஷயமாகும். இதனால் விரும்பத்தகாத பின் விளைவுகள் ஏற்படலாம். அவர்களுடைய நல்ல செயல்களை நாலு பேர் முன் பாராட்டுவது அவர்களை உற்சாகப்படுத்துவதோடு மேன்மைப்படுத்தவும் உதவும்.

அதோடு நீங்கள் அவர்களை உளப்பூர்வமாக நேசிக்கிறீர்கள் என்பதையும் அது அவர்களிடத்தில் பதிவு செய்யும். சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு பலர் முன்னிலையில் அடிப்பது உண்டு. தவறு செய்தால் அடிப்பது சரியான அணுகுமுறையல்ல. மேலும் நம் மீதுள்ள கோபத்தை அவர்கள் மற்ற குழந்தைகள் தம்பி, தங்கைகள் மீது காட்ட வாய்ப்பிருக்கிறது.





குழந்தை மனநல மருத்துவர்கள் கூற்றுப்படி பெரும்பாலான குழந்தைகள் மற்றவர்களிடம் அடிதடி வரை போகும் பின்னணிக்கு இது தான் காரணம். தாங்கள் பட்ட அவமானத்தை அவர்கள் இப்படித் தீர்த்துக் கொள்வார்கள். பொது இடங்களில் பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்துவது மிகவும் கடினமான செயல்.

பொறுமையாக அவர்களை கட்டுப்படுத்த முயலுங்கள். முடியாவிட்டால் அந்த இடத்திலிருந்து அவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறி விடுங்கள். அதைவிடுத்து காட்டுத்தனமாக அடிப்பது பெற்றோரை அநாகரீகமாக காட்டும் செயல்.

பொதுவாக வாதம் முடக்குவாதம் வாயுத்தொல்லை போன்றவற்றுக்கு இந்த முடக்கத்தான் நல்ல நிவாரணம் தரக்கூடியது




முடக்கத்தான் என்று அழைக்கப்படும் முடக்கற்றான் மூலிகையை, மொடக்கத்தான் என்றும் சொல்வார்கள். கிராமங்களில் மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களிலும் தோட்டம் மற்றும் வேலியோரங்களில் தானாகவே வளரக்கூடிய இந்த முடக்கத்தான், கொடி வகையைச் சேர்ந்தது. 

நகரத்தில் கீரை விற்பவர்களிடம் இந்த முடக்கத்தான் கீரை கிடைக்கும்.மூட்டுகளை முடக்கி வைக்கும் முடக்கு வாத நோயை விரட்டுவதால், இது முடக்கற்றான் (முடக்கு அறுத்தான்) என்ற பெயரைக் கொண்டிருக்கிறது. 

ஒரு பிடி முடக்கத்தான் இலையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, கால் பங்காக சுண்டக்காய்ச்சி வடிகட்டி, ஒருவேளைக்கு 25 மில்லி வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வாதம், வாயுத்தொல்லை விலகும்.பிரச்னையைப் பொறுத்து சில நாட்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இப்படிச் சாப்பிடும்போது சிலருக்கு சில நேரங்களில் தாராளமாக மலம் போகலாம். பயப்படத் தேவையில்லை. அதிகமானால் எலுமிச்சை சாறு குடிக்கலாம்; மலம் போவது நின்றுவிடும். 

இதேபோல் கை, கால் மற்றும் முகம் போன்ற பகுதிகளில் வரக்கூடிய வாதக்கோளாறுகளுக்கு முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் நாளடைவில் குணம் கிடைக்கும்.மேற்சொன்ன பிரச்னை உள்ளவர்கள் காலை உணவான தோசையுடன் இந்த முடக்கத்தானை சேர்த்துக்கொள்ளலாம். 

அதாவது தோசை மாவுடன், அரைத்து வைத்த முடக்கத்தான் கீரையை கலந்து தோசை வார்த்துச் சாப்பிடுவதால் குணம் கிடைக்கும். இதை அவ்வப்போது செய்து வரலாம். வாதம், வாயுத்தொல்லை உள்ளவர்கள்தான் என்றில்லாமல் எல்லோருமே இந்த முடக்கத்தான் தோசையைச் சாப்பிடலாம். காரக்குழம்பு, சாம்பார், ரசம், சூப் என பலவிதங்களிலும் முடக்கத்தான் கீரையைச் சமைத்து உண்ணலாம்.

இன்றைய அவசர உலகில் ஏதேதோ உணவுகளை உண்பதால் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் ஏராளமாக உள்ளனர். இதற்காக என்னென்னவோ சிகிச்சை எடுத்தும் நிவாரணம் கிடைக்காத நிலையில், பக்கவிளைவுகளே ஏற்படுகின்றன. அவர்கள் முடக்கத்தான் ரசம் வைத்து அருந்துவதால், தாராளமாக மலம் போகும். 

ஒரு கைப்பிடி முடக்கத்தான் கீரையுடன், கால் ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம், தக்காளி ஒன்று, வெள்ளைப்பூண்டு 5 பல் சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து பொறுக்கும் சூட்டில் அருந்தினால், மலச்சிக்கலுக்கு நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக, இரவு வேளையில் இதை செய்தால் காலையில் தாராளமாக மலம் போகும்.

முட்டை பிரியாணி ரெசிபி செய்வது எப்படி




தேவையான பொருட்கள்


4 வேகவைத்த முட்டை
இரண்டு பெரிய வெங்காயம் நறுக்கியது
ஒரு சிறிய தக்காளி நறுக்கியது
கொத்தமல்லி தழை 1 தேக்கரண்டி
புதினா தழை ஒரு தேக்கரண்டி நறுக்கியது
நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
தாவர எண்ணெய் 1.5 டேபிள் ஸ்பூன்
1 டேபிள் ஸ்பூன் தயிர்
பச்சை மிளகாய் 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை டேபிள் ஸ்பூன்
½ டீ ஸ்பூன் மிளகாய் தூள்
½ தேக்கரண்டி மல்லி தூள்
2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
உப்பு சுவைகேற்ப‌
நான்கு கிராம்பு
பட்டை
2 ஏலக்காய்
¼ அளவு சீரகம்
4 மிளகு
பாசுமதி அரிசி
3 கிராம்பு
4 ஏலக்காய்
பட்டை
மராட்டி மொக்கு
இரண்டு பிரின்ஜி இலைகள்
5 புதினா இலைகள்
½ தேக்கரண்டி எண்ணெய்
¾ தேக்கரண்டி உப்பு
தேவையான அளவு நீர்

வழிமுறைகள்:

* பாசுமதி அரிசியுடன் கிராம்பு, பிரின்ஜி இலைகள், கிராம்பு, ஏலக்காய், புதினா இலைகள், எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொண்டு, இதை ஆற விடவும்.

* கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கிக் கொண்டு இதில் வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கிக் கொண்டு வெங்காயத்தை தனியே வைத்துக் கொள்ளவும்.

* இந்த சூடான வெங்காயத்துடன், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், பிரியாணி மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள‌ வேண்டும், பின் இதில் முட்டை மற்றும் நறுக்கப்பட்ட தக்காளி சேர்த்து நன்கு இந்த கலவையை கலந்து கொள்ளவும்.

* இந்த கலவையுடன் மீதமுள்ள தயிர் சேர்த்து மீண்டும் 5 நிமிடங்கள் வேக வைக்கவும், பின் இதில்  மீதமுள்ள எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

* இப்போது பெரிய பாத்திரம் எடுத்து கொண்டு பிரியாணி தயார் செய்ய, அதில் எண்ணெயை தடவி கொண்டு அதன் மீது முட்டை கலவையை பரவலாக போடு அதன் மீது அரிசியை போடவும்.

* இப்போது நீங்கள் உங்கள் முட்டை பிரியாணி செய்முறை சஞ்சீவ் கபூர் செய்முறை போல தயாராகி விட்டது. எனவே இந்த சஞ்சீவ் கபூர் பாணியிலான முட்டை பிரியாணி செய்முறையை நன்கு அலங்கரித்து சூடாக பரிமாறலாம் நீங்கள்

எலுமிச்சை பழத்தில் ஒளிந்திருக்கும் பல அதிசயங்களையும் அது அழகை மேம்படுத்த உடம்பிற்கும் சருமத்திற்கும் எப்படி பயன்படுகிறது என்பதையும் இப்போது பார்க்கலாம்.






எலுமிச்சை பழத்தை சருமத்திற்கும் எப்படி பயன்படுத்துவது?

இளமையுடன் இருக்க… 

உடம்பில் முதுமை தெரியும் பகுதிகளை எலுமிச்சையை வைத்து நீக்கலாம். 
எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், அது சருமத்தில் உள்ள சுருக்கங்களை எதிர்த்து போராடும்.

சரும சுருக்கங்களை நீக்க நல்லதொரு பேஸ் பேக் வேண்டுமா? 

அப்படியெனில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றை எடுத்து, இனிக்கும் பாதாம் எண்ணெயில் கலந்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை ஊற விடுங்கள். இல்லையெனில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சிடர் வினீகரை சமமான அளவில் கலந்து, இளமை தொலையும் இடங்களில் தடவுங்கள்.


எண்ணெய் பசையுள்ள சருமத்தை பராமரிக்க…

எண்ணெய் வழியும் சருமத்தில் முகப்பரு, கரும்புள்ளி என பல சரும பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே எண்ணெய் பசையான சருமத்திற்கு நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தின் எண்ணெய் மூலக்கூறுகளை உடைத்தெறியும். அதனால் சருமம் மென்மையாக விளங்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை தண்ணீருடன் கலந்து, அந்த கலவையை பஞ்சுருண்டையை பயன்படுத்தி முகத்தில் தடவுங்கள். அதிலும் எண்ணெய் பசை சருமத்தை கொண்டவர்கள், இதனை தினசரி செய்ய வேண்டும்.

சருமம் புத்துணர்வும், மென்மையும் அடைய…

எலுமிச்சை சாறு, சருமத்தை மென்மையாக வைக்க உதவும். அதிலும் முகத்தில், முட்டியில், முழங்கையில் எலுமிச்சை சாற்றை தடவினால், அவைகள் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். குறிப்பாக எலுமிச்சையின் தோலை முகத்தில் தேய்த்தால் அது இயற்கை தெம்பூட்டியாகவும், இறந்த செல்களை அகற்றவும் செய்யும்.

மேலும் பொலிவிழந்த வறண்ட சருமத்திற்கு எலுமிச்சை கலந்த எண்ணெயை உபயோகப்படுத்தலாம். அழகிய இதழ்கள் எலுமிச்சை பானம் இதழ்களுக்கும் பயனுள்ளதாக விளங்குகிறது. வறட்சி, வெடிப்பு மற்றும் வெம்புண் போன்றவைகளால் உதடு பாதிக்கப்பட்டிருந்தால், உதட்டில் எலுமிச்சை சாற்றினை தடவுங்கள். எலுமிச்சை சாற்றை பாலின் நுரை மற்றும் தேனுடன் கலந்து உதட்டின் மீது தடவலாம்.

அக்குள்களைப் பராமரிக்க…

நண்பர்களை சந்திக்க அல்லது பார்ட்டிக்கு செல்ல வெளியே கிளம்புகிறீர்களா? அப்போது அக்குள் அசிங்கமாகவும், துர்நாற்றம் வீசுவதையும் பின்னர் தான் உணர்ந்தீர்களா? வியர்வை, வெப்பம் மற்றும் தூய்மை கேடு இவை அனைத்தும் அக்குளை கருமையடையச் செய்து துர்நாற்றத்தை கொடுக்கும். எனவே எலுமிச்சை சாற்றில் சிறிய பஞ்சுருண்டையை முக்கி, அக்குளுக்குள் தடவுங்கள். வேண்டுமெனில் எலுமிச்சையை அப்படியே தடவலாம். இனி என்ன, நீங்கள் பயமில்லாமல் ஸ்லீவ்லெஸ் சட்டையை அணியலாம்.

உடலில் இருந்து கொண்டே அறிகுறிகளை இறுதி நாட்களில் காட்டும் புற்றுநோய் வகைகள் என்னென்ன என்பதை இனி அறிவோம்





உடலில் இருப்பது கூட தெரியாத மறைந்து தாக்கும் கொடூர புற்றுநோய்கள்

புற்றுநோய் வகைகள் தான் நம்மை அதிகம் மறைந்திருந்து தாக்க கூடும். உடலில் இருந்து கொண்டே அறிகுறிகளை இறுதி நாட்களில் காட்டும் புற்றுநோய் வகைகள் என்ன என்பதை அறியலாம்.

உடலில் இருப்பது கூட தெரியாத மறைந்து தாக்கும் கொடூர புற்றுநோய்கள்
இன்று வருகின்ற நோய்களின் எண்ணிக்கையை பார்த்தால் நம்மை அறியாமலே உள்ளுக்குள் பயம் வருகின்றது. சில வகையான நோய்கள் அறிகுறிகளை முன்கூட்டியே காட்டி விடும். ஆனால், சில வகையான கொடூரமான நோய்கள் உங்கள் உடலுக்குள் இருந்து கொண்டே இறுதி நாட்களில் மட்டுமே வெளிப்படுத்தும்.

இந்த வகையான நோய்கள் வருவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. குறிப்பாக நோய்களில் புற்றுநோய் வகைகள் தான் நம்மை அதிகம் மறைந்திருந்து தாக்க கூடும். 

நாம் நினைத்து கூட பார்க்காத அளவிற்கு புற்றுநோய்கள் ஏராளமான வகையில் உள்ளது. பொதுவாக புற்றுநோய் என்பது புற்றுநோய் செல்களால் உருவாகிறது. இந்த செல்கள் பல நாட்கள் நம் உடலில் இருந்து கொண்டே வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை குறைத்து விடும். பிறகு உடல் முழுக்க இவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும்.

கணைய புற்றுநோய்

கணையங்கள் மிக முக்கிய உறுப்பாக கருதப்படுகிறது. உங்களின் கணையம் பாதிக்கப்பட்டால் செரிமான கோளாறு, ஹார்மோன்கள் குறைபாடு, சர்க்கரை அளவு அதிகரித்தல் போன்றவை ஏற்படும். கணையத்தில் புற்றுநோய் வந்தால் அடிவயிற்றில் வலி, வயிற்று உப்பசம், பசியின்மை போன்ற அறிகுறிகள் கடைசி கட்டத்தில் ஏற்படும். ஆனால், இதனை பலர் தொப்பை விழுந்துள்ளதாக சாதாரணமாக கருதுகின்றனர்.

ப்ரோஸ்டேட் புற்றுநோய்

ஆண்களை அதிகமாக தக்க கூடிய புற்றுநோய் வகைகளில் இது தான் முதலிடத்தில் உள்ளது. இந்த நோயின் அறிகுறிகள் தென்படுவது மிக கடினம். விந்தணுக்களுடன் சீழ் போன்று வருதல், பிறப்புறுப்பு வீங்குதல் போன்ற அறிகுறிகளை இவை இறுதியாக உணர்த்தும். அத்துடன் சிறுநீருடன் ரத்தமும் கலந்து வர கூடும்.

சிறுநீரக புற்றுநோய்

மிக கடினமாக கண்டறியப்படுகின்ற புற்றநோய் வகையை சார்ந்தது இது. ஆரம்ப நிலையில் எந்த ஒரு அறிகுறியையும் இது தருவதில்லை. ஆனால், இறுதி தருவாயில் பின் முதுகு வலி, திடீரென்று உடல் எடை குறைதல், சிறுநீரகத்தில் ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட கூடும். இதை முதல் நிலையில் அறிவது மிக கடினமாகும்.

நுரையீரல் புற்றுநோய்

புகை பிடிப்பதாலே பாதிக்கும் மேற்பட்டோர்க்கு இந்த புற்றுநோய் வருகிறது. இதன் அறிகுறிகளும் பல நாட்கள் உடலில் ஊறியே பின்னரே தெரிய வரும். ஆரம்ப நிலையில் X-ray எடுத்து பார்த்தல் கூட இந்த புற்றுநோய் இருப்பதாக கண்டறிய முடியாதாம். அதிக இரும்பல், நீண்ட நாள் காய்ச்சல், மூச்சு திணறல் ஆகியவை இதற்கான அறிகுறிகளாகும்.

கருப்பை புற்றுநோய்

ஆண்களை போலவே பெண்களை பிரத்தியேகமாக தாக்க கூடிய கொடூரமான புற்றுநோய்களில் இதுவும் ஒன்று. ஆரம்ப நிலையில் இதன் அறிகுறிகளை கண்டறிவது மிக கடினம். இவை பெண்களின் பிறப்புறுப்புகளில் உண்டாக கூடும். மலத்தில் ரத்தம் வருதல், குடலில் பாதிப்பு போன்ற அறிகுறிகள் பின்னாளில் தென்பட கூடும்.

சார்க்கோமா

தசைகளிலும் எலும்புகளிலும் உருவாக கூடிய புற்றுநோய் இது. குறிப்பாக கொழுப்புகளிலும், மெல்லிய திசுக்களிலும், நரம்புகளிலும், ரத்த நாளங்களிலும் இவை ஊடுருவி இருக்கும். மேலும், தோலில் அடிப்பகுதியில் இவை உருவாகவும் கூடும். இவை எந்த உறுப்புகளில் வேண்டுமானாலும் வரலாம். இதன் அறிகுறியை ஆரம்பத்தில் அறிய இயலாது.

கல்லீரல் புற்றுநோய்

மிக மோசமான நோய்களில் இதுவும் அடங்கும். கல்லீரலில் புற்றுநோய் உண்டாக்கினால் கண்டறிவது மிக கடினமாகும். முதலில் கல்லீரல் வீங்க தொடங்கி, புற்றுநோய் செல்கள் கல்லீரல் முழுவதும் பரவும். சிலருக்கு பரம்பரை ரீதியாகவும் இந்த நோய் வர கூடும்.

விறைப்பை புற்றுநோய்

20 முதல் 45 வயதுடைய ஆண்களுக்கு இந்த புற்றுநோய் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. விந்தணுக்களை உருவாகும் போது அதனுடனே புற்றுநோய் கிருமிகளும் உருவாகி உயிரை எடுத்து விடும். இதனை முதல் நிலையில் அறிவது மிக கடினம்.

மூளை புற்றுநோய்

மூளை மற்றும் தண்டு வடத்தில் இந்த புற்றுநோய் செல்கள் உருவாக கூடும். இவை இறுதி நிலையில் தான் தனது அறிகுறியை வெளிப்படுத்தும் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். அடிக்கடி தலைவலி, பேசுவதில் தடுமாற்றம், மண்டை பகுதியில் புதுவித அறிகுறி இருந்தால் மூளை புற்றுநோய் என்று அர்த்தம்.